வட மத்திய கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு இரத்த தானம் நிகழ்வு 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்னவின் பணிப்புரையின் பேரில், வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த மாற்று நிலையத்தில் முறையான இரத்த இருப்புக்களை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டு இந்த இரத்தம் வழங்கும் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டதுடன் இந்த மகத்தான நோக்கத்திற்கு ஆதரவாக பண்டுகாபய மற்றும் ஷிக்ஷா நிறுவனங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் தானாக முன்வந்து இரத்தம் வழங்கினர்.

இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிருவனத்தின் கட்டளை அதிகாரி மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையின் கட்டளை வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்ச்சிக்காக கடற்படை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி ஆர் ஹிந்துஜா அவர்கள் மற்றும் வைத்தியசாலையின் பணியாளர்கள் பங்களிப்பு வழங்கினர்.