ரியர் அட்மிரல் அனுர கல்தேரா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் அனுர கல்தேரா இன்று (2022 மே 01 ) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1988 ஆம் ஆண்டு 02வது காலாட்படை கெடட் ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் அனுர கல்தேரா, தனது 33 வருடங்களுக்கும் மேலான பதவிக் காலத்தில் பல்வேறு நிறுவனங்களில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார். மேலும் அவர் துணை இயக்குனர் கடற்படை பயிற்சி (திட்டமிடல் மற்றும் உள்நாட்டுப் பயிற்சி உள்ளகம்) திருகோணமலை தென் கடற்படைக் கட்டளையின் கட்டளை அதிகாரி மற்றும் இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தின் கட்டளை அதிகாரி, கடற்படையின் காலாட்படை பணிப்பாளர் மற்றும் கடற்படைத் காலாட்படை தளபதி ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பணியாற்றிய புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியும் ஆவார்.