கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழாவுக்கு கடற்படையின் உதவி

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா 2022 ஜூன் 13 ஆம் திகதி காலை கொழும்பு பேராயர் மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பெருந்தொகையான கத்தோலிக்க பக்தர்கள் கலந்துகொண்ட இந்த ஆன்மிக விழாவை நடத்துவதற்கு இலங்கை கடற்படையினர் தமது உதவிகளை வழங்கினர்.

அதன்படி, கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் ஒருங்கிணைப்பில் கடற்படை வீரர்கள் வருடாந்த புனித ஆராதனையை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களித்தனர். இதேவேளை, புனித அந்தோனியார் தேவாலயத்தின் பாதிரியார் மற்றும் பக்தர்கள் வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கு நன்றி தெரிவித்தனர்.