கடற்படைத் தளபதி கௌரவ பிரதமரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை இன்று (2022 ஜூன் 15,) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

கௌரவ பிரதமர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் சுமூகமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கௌரவ பிரதமர் அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.