ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன இன்று (2022 ஜூன் 21) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன அவர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாவிடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் 15வது கெடட் ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன, தனது பதவிக் காலத்தில் முதல் நியமனமாக விரைவுத் தாக்குதல் படையின் 4 வது படைப்பிரிவின் அதிகாரியாகவும், 1999-2000 காலப்பகுதியில் குறித்த படைப்பிரிவின் பயிற்சி அதிகாரியாகவும், 2006-2007 காலப்பகுதியில் குறித்த படைப்பிரிவின் பயிற்சி நிர்வாகியாகவும் 2007-2008 காலப்பகுதியில் குறித்த படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் படைப்பிரிவை வலுவான தாக்குதல் படையாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன தனது பதவிக்காலத்தில் பல கடற்படைக் கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளதுடன் துணை இயக்குனர் கடற்படை திட்டங்கள் மற்றும் திட்டமிடல், கடல் கண்காணிப்பு துனை இயக்குனர், கடற்படை நடவடிக்கைகளின் துணை இயக்குனர், கடற்படை ஆராய்ச்சிப் பிரிவின் துணை இயக்குனர் மற்றும் சிரேஷ்ட வான் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், இந்தியாவின் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர், கடற்படை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர், கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தின் தளபதி, வடக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி, இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி மற்றும் திருகோணமலை துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரி, இயக்குனர் கடற்படை பயிற்சி, நீரியல் துறை துணை தலைவர், கடற்படை பயிற்சி இயக்குனர், கடற்படை நடவடிக்கைகளின் இயக்குனர், கடற்படை மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நீரியல் தலைவர், கிழக்கு கடற்படை கட்டளை தளபதி, கடற்படையின் துனை தலைமை அதிகாரி, கடற்படையின் தலைமை அதிகாரி ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பணியாற்றிய புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியும் ஆவார்.