மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக குமார கடமைகளை பொறுப்பேற்றார்.

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக குமார இன்று (2022 ஜூன் 27,) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர், ரியர் அட்மிரல் தம்மிக குமார கடற்படை தலைமையகத்தில் பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றினார். மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டதுடன் மேற்கு கடற்படை கட்டளையின் முன்னால் தளபதி தற்போதைய கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவினால் கட்டளை தலைமையகத்தில் வைத்து நியமனம் தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளையும் ரியர் அட்மிரல் தம்மிக குமாரவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

மேலும், முன்னாள் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவுக்கு மேற்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளால் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்ததை அடுத்து, வெளியேறும் தளபதியை பாரம்பரிய கடற்படை மரியாதையுடன் விடைபெற்றனர்.