கடற்படையின் புதிய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தளபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் அமல்படுத்தினார். அதன்படி, இது தொடர்பான நியமனக் கடிதத்தை இன்று (2022 ஜூலை 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான இவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 05வது உள்வாங்கல் பிரிவில் கெடட் அதிகாரியாக 1987 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்று கிளையில் சேர்ந்தார். கொத்தலாவல கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், 1989 இல் சப்-லெப்டினன்டாக அதிகாரமலிக்கப்பட்ட இவர் 1992 இல் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தனது சப்-லெப்டினன்ட் தொழில்நுட்பப் படிப்பை வெற்றிகரமாக முடித்து 1994 இல் இந்திய கடற்படை சுழியோடி பாடசாலையில் இருந்து சுழியோடி அனுமதியில் நிபுணத்துவம் பெற்றார். அதன் பின்னர், படிப்படியாக முன்வந்த இவர் ரியர் அட்மிரல் பதவிக்கு 15 ஜூலை 2020 அன்று பதவி உயர்வு பெற்றார்.

விரைவுத் தாக்குதல் ரோந்துக் கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் சிறப்பு படகுகள் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் தனது சேவையின் போது இலங்கை கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர் கடற்படை பயிற்சி இயக்குனர், கடற்படை ஆராய்ச்சி பிரிவு தலைவர், துணை தளபதி வட மத்திய கடற்படை கட்டளை, இயக்குனர் கடற்படை சிறப்பு படைகள், இயக்குனர் கடற்படை செயல்பாடு, இயக்குனர் கடற்படை வெளிநாட்டு ஒத்துழைப்பு, இயக்குனர் கடற்படை கடல்சார் புலனாய்வு இயக்குனர், தெற்கு கடற்படை கட்டளை தளபதி மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதியாக பணியாற்றினார். மேலும், ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படைத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் கடற்படையின் பிரதித் தலைமை அதிகாரியாக பணியாற்றிய புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரி ஆவார்.

ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா, ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர், 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள கடற்படை போர் கல்லூரியில் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியை முடித்தார். மேலும், அவர் 2012 இல் ஆஸ்திரேலியாவின் வொல்லொங்காங் பல்கலைக்கழகத்தில் கடல்சார் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றார், மேலும் 2018 இல் சீனாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் படிப்பை முடித்தார்.

எதிரிக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கைகளுக்காக மூன்று முறை ரண சூர பதக்கமும், தனது களங்கமற்ற குணம் மற்றும் கடமையில் அர்ப்பணிப்புக்காக உத்தம சேவா பதக்கமும், ஏறக்குறைய முப்பது வருடங்களாக எதிரிக்கு எதிரான துணிச்சலுக்காக உத்தம சேவா பதக்கமும் பெற்ற ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு அவரின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான பணிகளுக்காக, கடற்படைத் தளபதி ஏழு (07) சந்தர்ப்பங்களில் பாராட்டுக் கடிதங்களை வழங்கியுள்ளார்.

ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா கொமாண்டர் மாலா லமாஹேவாவை திருமணம் செய்து கொண்டதுடன் அவர்களுக்கு சச்சித் (24) மற்றும் ஷமல் (21) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.