கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவுக்கு இன்று (2022 ஜூலை 12) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் நியமனக் கடிதத்தை கையளிக்கப்பட்டது.

கண்டி தர்மராஜ கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க 1987 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் 16 ஆவது கேடட் ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக இணைந்தார். கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, 1989 ஆம் ஆண்டில் சப்-லெப்டினன்டாக நியமிக்கப்பட்ட இவர் 1991 இல் இந்திய கடற்படையில் தனது சப்-லெப்டினன்ட் தொழில்நுட்பப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார், மேலும் 1997 ஆம் ஆண்டில் வெந்துருத்தியில் உள்ள இந்திய கடற்படையின் நீருக்கடியில் போர் மையம் பள்ளியிலிருந்து நீருக்கடியில் போரில் நிபுணத்துவம் பெற்றார். அதன்பிறகு, படிப்படியாக முன்னேறிய இவர் 17 ஜூலை 2020 அன்று ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

அவர் தனது சேவையின் போது இலங்கை கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார், மேலும் விரைவுத் தாக்குதல் ரோந்துக் கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும் இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். கடற்படை நடவடிக்கைகளின் துணை இயக்குநர், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பயிற்சி கேப்டன், கடற்படை ஆய்வுப் பிரிவின் இயக்குநர், கொமடோர் கடல் பயிற்சி, இராணுவ ஒருங்கிணைப்பாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையம் தென்கிழக்கு கடற்படையின் துணைத் தளபதி, கட்டளை மற்றும் இயக்குனர் கடற்படை கொள்கை மற்றும் திட்டமிடல் போன்ற முக்கிய பதவிகளை வகித்த புகழ்பெற்ற மூத்த அதிகாரியும் ஆவார்.

மேலும், ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க, இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் 6ஆவது பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய வேளையில், 2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் கடற்படையின் பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதம் கடற்படைத் தளபதியினால் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பு இன்று (ஜூலை 12, 2022) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.