வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அருண தென்னகோன் கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அருண தென்னகோன் இன்று (2022 ஜூலை 12) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்களை வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை மரபுகளின்படி மரியாதை செலுத்தி வரவேற்ற பின்னர், குறித்த கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கொமடோர் இசிர காசிவத்த, புதிய கட்டளைத் தளபதியிடம் அந்தப் பதவிக்கான கடமைகளை கையளித்தார். ரியர் அட்மிரல் அருண தென்னகோன் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் கடற்படைத் தலைமையகத்தில் பணிப்பாளர் நாயகம் நபர்கள் மற்றும் தொண்டர் கடற்படைத் தளபதியாகவும் கடமையாற்றினார்.