கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் பத்தாவது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் (Bi- Annual Navy Journal) பத்தாவது பதிப்பு இன்று (2022 ஜூலை 15) கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தளபதி கேப்டன் அருன விஜயவர்தனவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் பகுப்பாய்வு சிந்தனை, கல்வி எழுதுதல் மற்றும் விரிவான வாசிப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் கடற்படை பணியாளர்களை ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த கடற்படை இதழ் வெளியிடப்படுகின்றது.

அதன்படி, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பில் இலங்கை கடற்படையின் பங்கு மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடற்படை வீரர்களால் எழுதப்பட்ட முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை இந்த இதழ் கொண்டுள்ளது.