இலங்கையின் புதிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருக்கு கடற்படைத் தளபதியின் வாழ்த்துக்கள்

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கேர்ணல் அந்தோனி சி. நெல்சன் (Lieutenant Colonel Anthony C. Nelson), மற்றும் தற்போது குறித்த பதவியில் பணியாற்றி வருகின்ற லெப்டினன்ட் கேர்ணல் ட்ரவிஸ் கொக்ஸ் (Lieutenant Colonel Travis Cox) ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (2022 ஜூலை 07) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். அங்கு லெப்டினன்ட் கர்னல் அந்தோனி சி. நெல்சன் அவர்களை அன்புடன் கடற்படைத் தளபதி வரவேற்றார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், தனது பதவிக்காலம் நிறைவடைந்து வெளியேறவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ட்ரவிஸ் கொக்ஸ் அவர்களுக்கும் கடற்படைத் தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறப்பட்டன.