245 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 478 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 245 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 478 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 ஜூலை 30 ஆம் திகதி பூனாவை இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்னாயக இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி அவர்களினால் வழங்கப்பட்டுள்ளன.

அதன் படி 245 வது ஆட்சேர்ப்பில் சிறந்த பயிட்சியாளருக்கான விருதை கடற்படை வீரர் டீ.ஜீ.வீ சந்தீப பெற்றுள்ளார். சகல பாடங்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை கடற்படை வீரர் டப்.எம்.கே.கே.ஜீ.பீ.ஐ.யூ வீரசிங்க பெற்றுள்ளார். மேலும், கடற்படை வீரர் ஆர்.எம்.ஜீ.என் ரத்னாயக்க சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றுள்ளதுடன் கே.ஜீ.எஸ் சப்தரங்க சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றுள்ளார். சிறந்த விளையாட்டு வீராங்கணிக்கான விருதை ஈ.எம்.என் ஹிமயங்கனி பெற்றுள்ளார். இதேவேளை, 245 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக ‘’தக்‌ஷயா” பிரிவு தெரிவு செய்யப்பட்டது. கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சிகளால் வண்ணமயமான காட்சி மிகவும் கவர்ந்தது.

இந்த வெளியேறல் அணிவகுப்புக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர், கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் கட்டளை அதிகாரி கெப்டன் அருன வீரசிங்க உட்பட குறித்த நிருவனத்தின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள், இராணுவம், விமானப்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.