இலங்கையின் புதிய மாலைதீவுக் குடியரசு பாதுகாப்பு ஆலோசகருக்கு கடற்படைத் தளபதியின் வாழ்த்துக்கள்

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கேர்ணல் ஹசன் அமிர் (Lieutenant Colonel Hassan Amir) மற்றும் தற்போது அந்த பதவியில் கடமையாற்றும் கர்னல் இஸ்மயில் நசீர் (Colonel Ismail Naseer) மற்றும் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (02 செப்டம்பர் 2022) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது, அங்கு கடற்படைத் தளபதி லெப்டினன்ட் கேர்ணல் ஹசன் அமீர்வை அன்புடன் வரவேற்றார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறவுள்ள இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் இஸ்மயில் நசீருக்கும் கடற்படைத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.