திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த பூஜை மற்றும் ஊர்வல திருவிழா பிரமாண்டமாக இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் வருடாந்த விநாயகர் பூஜை மற்றும் ஊர்வல திருவிழா 2022 செப்டம்பர் 01 ஆம் திகதி நடைபெற்றது. இதற்காக கடற்படை முகாம் வளாகத்தில் விநாயகர் சிலை தாங்கிய அழகிய ஊர்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் பிரதம பூசகரின் தலைமையில் இந்து சமய சடங்குகள் இடம்பெற்றன. கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் இப் பகுதி இந்து பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.