246 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 334 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 246 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 334 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 செப்டம்பர் 06 ஆம் திகதி காலி பூஸ்ஸவிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர், ரியர் அட்மிரல் சுஜீவ சேனவிரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் அவரால் வழங்கப்பட்டுள்ளன.

அதன் படி 246 வது ஆட்சேர்ப்பில் சிறந்த பயிட்சியாளருக்கான விருதை கடற்படை வீரர் ஆர்.பீ.என் மதுசங்க பெற்றுள்ளார். சகல பாடங்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை கடற்படை வீரர் ஆர்.ஜி.எம்.எம் ரத்னாயக்க பெற்றுள்ளார். மேலும், கடற்படை வீரர் கே.கே.ஆர்.டீ.எஸ் விஜேரத்ன சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றுள்ளதுடன் ஐ.சி மதுஷான் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றுள்ளார். இதேவேளை, 246 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக ‘’சுரனிமில” பிரிவு தெரிவு செய்யப்பட்டது. கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சிகளால் இந்த வண்ணமயமான காட்சி மிகவும் கவர்ந்தது.

அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த கடற்படையினரை உரையாற்றிய கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் சுஜீவ சேனவிரத்ன முதலில் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மேலும், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளிலும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதிலும் கடற்படை முக்கியப் பங்காற்றி வருவதாகவும், தேசத்தின் முதல் வரிசையாகக் கடற்படை செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், மனிதநேயம் மற்றும் நல்லிணக்கம் போன்ற உன்னத நற்பண்புகளைப் பேணிப் பாதுகாத்து, கடற்படையின் கடமைகள் மற்றும் பணிகளைத் தங்கள் கடற்படை வாழ்க்கையில் நிறைவேற்ற தங்களை அர்ப்பணிக்குமாறு பிரதம விருந்தினர் இளம் இரத்தம் கொண்ட கடற்படை வீரர்களை வலியுறுத்தினார்.

இந்த வெளியேறல் அணிவகுப்புக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர், தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹரேந்திர ஏக்கனாயக்க, கடற்படை தலைமையகத்தின் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் கட்டளை அதிகாரி கெப்டன் ஜயநாத் த சில்வா உட்பட குறித்த நிருவனத்தின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் மற்றும் வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.