இந்தியாவில் ராயல் நெதர்லாந்து தூதரகத்தில் உள்ள இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவில் உள்ள நெதர்லாந்து அரச தூதரகத்தில் பணிபுரியும் கப்டன் ரொபேர்ட் வான் புரூன்ஸ்சன் (Captain Robert van Bruinssen) இன்று (2022 செப்டம்பர் 21) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்தியாவில் உள்ள நெதர்லாந்து அரச தூதரகத்தில் இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகரான கப்டன் ரொபேர்ட் வான் புரூன்ஸ்சன் கடற்படைத் தளபதியை சந்தித்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும். அங்கு அவர்கள் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலை நடத்தினர்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.