கடற்படை தளபதி பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதி, பதில் பாதுகாப்பு அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ பிரமித பண்டார தென்னகோனை அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் சந்தித்தார்.

அங்கு கடற்படைத் தளபதி பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சிநேகபூர்வ சந்திப்பை மேற்கொண்டதுடன், உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி பதில் பாதுகாப்பு அமைச்சருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.