ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான இன்று (2022 நவம்பர் 03) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1987 ஆம் ஆண்டில் 17 வது ஆட்சேர்ப்பின் கேடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான, தனது பதவிக் காலத்தில் இலங்கை கடற்படையின் விரைவுத் தாக்குதல் ரோந்துக் கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கடற்படையின் கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், அவர் கடற்படை ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் மற்றும் கடற்படை செயல் இயக்குனர் கடற்படை ஆயுதங்கள், கடற்படை இயக்குனர் உணவு மற்றும் சீருடைகள், கடற்படை இயக்குனர் பணியாளர், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி, கடற்படை இயக்குனர் நடவடிக்கை, இயக்குனர் கடற்படை மரைன் சிறப்பு படை, இயக்குனர் கடற்படை வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் கடற்படை கடல்சார் கண்காணிப்பு மற்றும் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பணியாற்றிய புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியும் ஆவார்.