புதிய கடற்படைத் தளபதி கௌரவ ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்களை இன்று (2022 டிசம்பர் 19) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இதன்படி, இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கை கடற்படையின் 25ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு கௌரவ ஜனாதிபதி அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர், தேசிய கடமைகளில் இலங்கை கடற்படையின் அதிகபட்ச பங்களிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கடற்படைத் தளபதி மற்றும் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மேலும், இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியினால் கௌரவ ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.