Combat ’ 2022 கண்காட்சியுடன் கடற்படை இணைகிறது

பாடசாலை மாணவர்களிடையே சாரணர் இயக்கத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் கொழும்பு றோயல் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட Combat ’ 2022 கண்காட்சி 2022 டிசம்பர் 20 ஆம் திகதி குறித்த கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இங்கு கடற்படையினரால் வழங்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் கடற்படையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் கடற்படை வீரர்களால் வழங்கப்பட்ட செயல்விளக்கங்கள் இடம்பெற்றன.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், Combat’2022 கண்காட்சிக்காக கடற்படையால் பிரதிபலிக்கப்பட்ட சிறப்பு படகுகள் படை, சுழியோடி பிரிவு, கடற்படை அறிவு மற்றும் கடல்சார் பிரிவுகளின் ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் திறன்களைப் பார்க்க குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் மற்றும் கடற்படையினர் குழந்தைகளுக்கு காட்சிப்படுத்தப்பட்ட அம்சங்களைப் பற்றி கற்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.

மேலும், இக்கண்காட்சியுடன் இணைந்து கடற்படையின் இசைக்குழுவினர் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கிய நிகழ்ச்சி சிறுவர்களுக்கு புது அனுபவத்தை தரக்கூடியதாக இருந்தது.