ரியர் அட்மிரல் நிஷாந்த த சில்வா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் நிஷாந்த த சில்வா இன்று (2022 டிசம்பர் 23) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வாவிற்கு கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் துனைத் தளபதியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தலைமையிலான கடற்படை முகாமைத்துவ சபையினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதன் பின் ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வா கடற்படையின் பாரம்பரிய முறைப்படி சிறப்பு மரியாதையுடன் பிரியாவிடை பெற்று கடற்படை வாகன அணிவகுப்பில் கடற்படைத் தலைமையகத்திலிருந்து புறப்படும் போது அவருக்கு சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினர் வீதியின் இருபுறமும் நின்று வாழ்த்து தெரிவித்தனர்.

ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வா, 1986 ஆம் ஆண்டு 15 ஆவது கேடட் ஆட்சேர்ப்பில் கெடட் அதிகாரியாக கடற்படையின் வழங்கல் பிரிவில் இணைந்து கொண்டார், தனது பதவிக்காலத்தில் கேப்டன் வழங்கள் மற்றும் சேவைகள் வடமேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு, கடற்படை (ஓய்வூதியம்) பிரதிப் பணிப்பாளர், கொமடோர் அதிகாரி வழங்கள் மற்றும் சேவைகள் (வடக்கு), இயக்குநர் கடற்படை உள் தணிக்கை, இயக்குநர் கடற்படை கொள்முதல் மற்றும் சேவைகள், இயக்குநர் கடற்படை வெளிநாட்டு கொள்முதல், இயக்குநர் கடற்படை உணவு மற்றும் சீருடைகள், இயக்குநர் ஜெனரல் வரவுசெலவு மற்றும் நிதி, பணிப்பாளர் நாயகம் வழங்கள் மற்றும் சேவைகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பணியாற்றிய புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியும் ஆவார்.