கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (2023 ஜனவரி 02) கட்டளைத் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார பதவியேற்பதற்கு முன்னர் மேற்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதியாக கடமையாற்றினார். கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி புதிய தளபதியை கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் கிழக்கு கடற்படை கட்டளையின் முன்னால் தளபதியான ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கட்டளை தலைமையகத்தில் வைத்து நியமனம் தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளையும் ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.

மேலும், முன்னாள் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்னவுக்கு கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளால் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்ததை அடுத்து, வெளியேறும் தளபதியை பாரம்பரிய கடற்படை மரியாதையுடன் விடைபெற்றனர்.

மேலும், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (02.01.2023) முதல் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாகவும், இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதியாகவும் கடமையாற்றவுள்ளார்.