கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க 2022 டிசம்பர் 23 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2023 ஜனவரி 03) அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாத்தளை செயின்ட் தோமஸ் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க 1987 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் 17 ஆவது கேடட் ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக இணைந்தார். திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, 1989 ஆம் ஆண்டில் துணை லெப்டினன்டாக நியமிக்கப்பட்ட இவர் 1992 ஆம் ஆண்டில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தனது துணை லெப்டினன்ட் தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக முடித்து 1997 ஆம் ஆண்டில் நீர் கடப்பு பற்றிய நிபுணத்துவம் இந்தியாவில் பெற்றார். அதன்பிறகு, படிப்படியாக முன்னேறிய இவர் 01 ஜூலை 2021 அன்று ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

அவர் தனது பதவிக் காலத்தில், இலங்கை கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார், விரைவுத் தாக்குதல் ரோந்துக் கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கடற்படையின் கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், இயக்குநர் விளையாட்டு, கடற்படைக் கொள்கை மற்றும் திட்டமிடல் இயக்குநர், தென்கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி, வடமத்திய கடற்படைக் கட்டளைத் தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் போன்ற முக்கிய பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியும் ஆவார்.

மேலும், ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகளாக தனது கடமைகளை நிறைவேற்றும் அதேவேளை, கடற்படையின் பிரதித் பிரதித் தலைமை அதிகாரியாகவும் தனது கடமைகளை நிறைவேற்றுவார்.