இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) அவர்கள் இன்று (2023 ஜனவரி 05) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதிக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமூகமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் இயன் கெய்னும் (Captain Ian Cain) இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாற்றப்பட்டன.