இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதிக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் திரு. மிச்செல் அப்பிள்டனுக்கும் (Michael Appleton) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திபொன்று இன்று (2023 ஜனவரி 20) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கை கடற்படையின் 25வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு இலங்கையின் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதிக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாற்றப்பட்டது.