இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் முஹம்மட் சப்டார் கான் (Colonel Muhammed Safdar Khan) இன்று (2023 ஜனவரி 25) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் முஹம்மட் சப்டார் கான் அவர்கள் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இலங்கை கடற்படையின் 25 வது தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதி பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கினார்.