இலங்கையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமார் பாரூக் புர்கி (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 மார்ச் 09) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சிநேகபூர்வ கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் கொமடோர் கோசல வர்ணகுலசூரிய மற்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் முஹம்மட் சப்தர் கான் (Colonel Muhammad Safdar Khan) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.