யாழ்ப்பாணம் பலைதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை வெற்றிகரமான குறிப்பில் நடத்த கடற்படையின் உதவி

யாழ்ப்பாணம், பலைதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா 2023 மார்ச் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன் இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்களின் மேற்பார்வையின் கீழ். இத் திருவிழாவை சிறப்பாக நடத்தும் வகையில், கடற்படையினர் கடலில் போக்குவரத்து வசதிகள், சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மற்றும் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக உயிர்காக்கும் காவலர்களை அனுப்பியுள்ளனர்.

இவ்விழாவின் பிரதான ஆராதனையை யாழ் மறைமாவட்டப் பொறுப்பாளர் அருட்தந்தை ஜோசப் ஜெபரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் இதுக்காக பல பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.