திருகோணமலை பகுதியில் சமூக கண் சிகிச்சை மற்றும் சுகாதார திட்டமொன்று கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது

திருகோணமலை மற்றும் ஹந்தல சிங்கம் கழகங்கள் இணைந்து 2023 மார்ச் 26 ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக கண் சிகிச்சை மற்றும் தொற்றாத நோய் தடுப்பு திட்டத்துற்கு ஆதரவளிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார அவர்களின் மேற்பார்வையின் கீழ் சுமார் 113 அப் பகுதி மக்கள் இந்த சமூக கண் சிகிச்சை மற்றும் தொற்றாத நோய் தடுப்பு திட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியின் போது, தொற்றாத நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. மேலும், சுகாதார மேம்பாடு மற்றும் சமூகத்தின் கல்வி ஆகியவை நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்களாக இருந்தன.

மேலும், இதுபோன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு தேவையான ஆதரவை வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.