பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS SHAHJAHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'PNS SHAHJAHAN' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 02,) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 134.1 மீற்றர் நீளமும், மொத்தம் 169 கடற்படையினர் கொண்ட ‘PNS SHAHJAHAN’ என்ற ப்ரிகேட் வகையின் போர்க்கப்பலில் கட்டளை அதிகாரியாக கேப்டன் ADNAN LAGHARI TI பணியாற்றிகிரார். கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (02 ஜூன் 2023) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேலும், 'PNS SHAHJAHAN' என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் அதன் முழு கடற்படையினரும் பங்கேற்கவும், பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ‘PNS SHAHJAHAN’ கப்பல் 2023 ஜூன் 04 அன்று தீவை விட்டு புறப்பட உள்ளதுடன் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் கடற்படை பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.