ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

38 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 செப்டம்பர் 01) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வுகள் முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன 1985 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் மருத்துவக் கிளையில் நேரடி நுழைவு அதிகாரியாக இணைந்து கொண்டதுடன், தனது கடற்படை பணியின் போது கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைகளில் பல மருத்துவக் கிளை நியமனங்களை மேற்கொண்டார். அவர் வகித்த சில முக்கிய நியமனங்களில்; கட்டளை மருத்துவ அதிகாரி (கிழக்கு), கட்டளை மருத்துவ அதிகாரி (மேற்கு), கட்டளை மருத்துவத் துறை (மேற்கு), கட்டளை மருத்துவத் துறை (கிழக்கு), துணை இயக்குநர் கடற்படை மருத்துவ சேவைகள், இயக்குநர் கடற்படை மருத்துவ சேவைகள், கொமடோர் சுகாதார கண்காணிப்பாளர் (மேற்கு), இயக்குநர் கடற்படை மருத்துவம் சேவைகள் (தடுப்பு மற்றும் புனர்வாழ்வு), பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவைகள் மற்றும் கடற்படைத் தளபதியின் முதன்மை ஆலோசகர், கோவிட்-19 பரவுவதைத் தடுத்தல், கடற்படைப் பணியாளர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் தொற்று நோய் பரவுவதைத் தடுத்தல் மற்றும் கடற்படைத் தளபதியின் முதன்மை ஆலோசகர் ஆகிய பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளில் பணியாற்றினார்.