மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சமன் பெரேரா பதவியேற்பு

மேற்கு கடற்படை கட்டளையின் மற்றும் இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சமன் பெரேரா இன்று (2023 செப்டம்பர் 01) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

கடற்படை மரபுப்படி ரியர் அட்மிரல் சமன் பெரேராவை மேற்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்ற பின்னர், குறித்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா, கட்டளைத் தலைமையகத்தில் வைத்து புதிய தளபதியிடம் கடமைகளை கையளித்தார்.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின் ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா, கடற்படையின் மரபுப்படி மேற்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெறப்பட்டதுடன், ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா எதிர்காலத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பதவியேற்க உள்ளார்.