இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான 11வது பணியாளர் சந்திப்பு கொழும்பில் தொடங்கியது

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையில் பதினொன்றாவது (11) முறையாக நடைபெறுகின்ற பணியாளர்கள் கலந்துரையாடல் அமர்வு (11th Navy to Navy Staff Talks – Indain Navy and Sri Lanka Navy) இன்று (2023 அக்டோபர் 17) கொழும்பு கலங்கரை விளக்க உணவகத்தில் தொடங்கியதுடன் இதற்கு இணையாக இந்திய கடற்படை தூதுக்குழுவின் தளபதி ரியர் அட்மிரல் Nirbhay Bapna (Assistant Chief of Naval Staff – Foreign Cooperation and Liaison) இன்று (2023 அக்டோபர் 17) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினார்.

இந்த அமர்வில் பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க தலைமையிலான இலங்கை கடற்படை தரப்பு இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் இந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் Nirbhay Bapna தலைமையிலான இந்திய கடற்படையினர் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.

இம்முறை பதினொன்றாவது (11வது) பேச்சுவார்த்தை அமர்வை ஆரம்பித்து, கடந்த ஆண்டு (2022) நடைபெற்ற பத்தாவது (10வது) பணியாளர் பேச்சுவார்த்தை அமர்வின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் முதலில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு, பயிற்சி பரிமாற்றம், தொழில்நுட்ப அறிவு மற்றும் தகவல் பரிமாற்றம், ஹைட்ரோமெட்ரிக் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கருத்து பரிமாற்றம் நடந்தது.