இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 18 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 அக்டோபர் 19) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

மேலும், ‘INS Airavat’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், இலங்கை கடற்படையினருக்கு கப்பலின் செயற்பாடுகளை அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்தது.