252 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 523 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 252 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் நானூற்று இருபத்தி மூன்று (423) கடற்படை வீரர்கள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூறு (100) கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2023 அக்டோபர் 20 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் தளபதியும் கட்டளை அதிகாரியுமான கேப்டன் சமிந்த குணரத்னவின் அழைப்பின் பேரில் கடற்படை காலாட்படையின் தளபதி, ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் அவரால் வழங்கப்பட்டன.

இதன்படி, 252 ஆவது ஆட்சேர்ப்பின் சிறந்த கடற்படை வீரருக்கான வெற்றிக்கிண்ணம் பெண் கடற்படை வீரர் டப்.எம்.யூ.எஸ் விஜேகோன் பெற்றுள்ளதுடன் அனைத்து பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற கடற்படை வீரருக்கான வெற்றிக்கிண்ணம் பெண் கடற்படை வீரர் ஆர்.ஏ.சீ.எச் ரத்னாயக்க பெற்றுள்ளார். சிறந்த துப்பக்கியாளருக்கான வெற்றிக்கிண்ணம் கடற்படை வீரர் பீ.எம்.டி. திதுலங்க பெற்றுள்ளார். சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான வெற்றிக்கிண்ணத்தை பெண் கடற்படை வீரர் எஸ்.ஏ. ஐ.எம் சமரவீரவும் சிறந்த வீரருக்கான வெற்றிக்கிண்ணத்தை கடற்படை வீரர் எம்.எம்.எம்.ஜே சஞ்சீவும் பெற்றுக்கொண்டனர்.இதேவேளை, 252 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக ‘’வலகம்பா” பிரிவு தெரிவு செய்யப்பட்டது.

252 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான கடற்படை வீரர்களின் அணிவகுப்பு வைபவத்தின் பெண் மாலுமிகள் கொண்ட ஒரு சடங்கு காவலர் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் வரலாற்றில் மட்டுமன்றி முப்படையினரிடையேயும் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய சம்பிரதாய காவலர் அணிவகுப்பொன்று இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும்.

இங்கு அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த கடற்படையினரை உரையாற்றிய கடற்படை காலாட்படையின் தளபதி , ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும முதலில் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புதிய தொழில்நுட்பம் மற்றும் அறிவாற்றலுடன் ஆயுதம் ஏந்திய தொழில்முறை கடற்படையின் பாத்திரத்தை ஆற்றுவதற்கு, தாய்நாட்டைப் பாதுகாக்கவும், தாய்நாட்டிற்கு கிடைத்த உண்மையான சுதந்திரத்தை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கவும் திறமையான மற்றும் ஒழுக்கமான மாலுமியாக உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், இலங்கைக்கு சொந்தமான கடல் வலயத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடல் வழியாக நாட்டுக்கு ஏற்படும் எந்தவொரு சவாலையும் எதிர்த்துப் போராடுவதற்கும், இலங்கைக்கு சொந்தமான தேடுதல் மற்றும் மீட்பு வலயத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களில் கடல்சார் மற்றும் மீனவ மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை கடற்படைக்கு தனித்துவமான பொறுப்பு உள்ளதாக தெரிவித்த ரியர் அட்மிரல் ஜலஜ் பொன்னம்பெரும பணியமர்த்தப்படும் பயிற்சி மாலுமிகள் தாங்கள் கற்றுக்கொண்ட திறமை மற்றும் ஒழுக்கத்தை நடைமுறையில் கடைப்பிடித்து எதிர்காலத்தில் கடற்படையில் அந்த பொறுப்பை நிறைவேற்ற உறுதியுடன் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கூறினார். நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக தமது அன்புக்குரிய மகன்கள் மற்றும் மகள்களை கடற்படையினரிடம் ஒப்படைத்த பயிற்சி மாலுமிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும், கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சிகளால் இந்த வண்ணமயமான காட்சி மிகவும் கவர்ந்தது.

இந்த வெளியேறல் அணிவகுப்புக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர், தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சின்தக குமாரசிங்க, துனை தளபதி கொமடோர் ஜயந்த பண்டார, கடற்படை தலைமையகத்தின் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.