கடற்படை மரியாதைக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ஜகத் லியனகமகே கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரியர் அட்மிரல் ஜகத் லியனகமகே தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 நவம்பர் 08) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் துனை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் ஜகத் லியனகமகே அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

1990 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையில் 20வது உள்வாங்கலின் கேடட் அதிகாரியாக இணைந்து கொண்டார் மற்றும் அவரது புகழ்பெற்ற கடற்படை பணியின் போது பல தளவாட நியமனங்களை மேற்கொண்டார். அவர் வகித்த சில முக்கிய நியமனங்களாக மூத்த பணியாளர் அலுவலர் (உள்ளூர் கொள்முதல்), மூத்த உதவிச் செயலாளர், கடற்படைத் தளபதியின் செயலாளர், துணை இயக்குநர் சேவைகள், துணை இயக்குநர் கடற்படைக் கொள்கை மற்றும் திட்டம் (தளவாடங்கள்), கேப்டன் தளவாடத் துறை (வடக்கு), இயக்குநர் தளவாடங்கள், கேப்டன் தளவாடத் துறை (தென்கிழக்கு) , துணை இயக்குனர் உள்ளூர் கொள்முதல், துணை இயக்குனர் உனவு மற்றும் ஆடை, கடற்படை செயலாளர், இயக்குனர் கடற்படை உனவு மற்றும் ஆடை, இயக்குனர் கடற்படை வெளிநாட்டு கொள்முதல், இயக்குனர் ஒருங்கிணைந்த தளவாட மேலாண்மை அமைப்பு, இயக்குனர் கடற்படை தளவாடங்கள் மற்றும் இயக்குனர் ஜெனரல் (பட்ஜெட் மற்றும் நிதி ஆகியவை குறிப்பிடலாம்.