இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமியில் கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் நடைபெற்றது

2023 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வு 2023 நவம்பர் 16 ஆம் திகதி மற்றும் இன்று (2023 நவம்பர் 17) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி மாலா லமாஹேவாவும் கலந்து கொண்டார்.

கடற்படையின் 73வது ஆண்டு நிறைவையொட்டி, கடற்படையினருக்கு ஆசிர்வாதம் வழங்கும் பல சமய நிகழ்ச்சிகள் தொடங்கப்பட உள்ளன. அதன் படி பௌத்த சமய வழிபாடுகளை ஆரம்பிக்கும் வகையில் கடற்படைத் தளபதி 2023 நவம்பர் 16 ஆம் திகதி ருவன்வெலி மஹா சேய சைத்தியராமதிகாரி, வடமத்திய மாவட்ட பிரதம சங்கநாயக, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர், வணக்கத்துக்குரிய ஈத்தலவெடுனுவெவே ஞானதிலக நாயக்கதேரரை முதலில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். பின்னர் கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கஞ்சுக பூஜை பிங்கம ருவன்வெலி மகா சே ரதுன் அருகில் இடம்பெற்றது. அங்கு கடற்படைத் தளபதி தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை பௌத்த சங்க உறுப்பினர்களால் 300 மீற்றர் நீள பௌத்தக் கொடி அழகிய ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ருவன்வெலி மகா சேய கர்பாவை சுற்றி வைக்கப்பட்டது.

பின்னர் வணக்கத்துக்குரிய ஈத்தலவெடுனுவெவே ஞானதிலக நாயக்கதேரரின் ஆலோசனைக்கமைய மகா விகாரை மற்றும் மகா பிரிவேனவின் உப பீடாதிபதியும், ருவன்வெலி மஹாசயே தேவாவின் பொறுப்பதிகாரி வணக்கத்துக்குரிய குடாகல வெவே ஞானவிமல தேரரின் தலைமையில் பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்றது. இதற்கு இணையாக, பிக்குவுக்கு பிரிகர மற்றும் கிலன்பசவும் வழங்கப்பட்டது.

இன்று (2023 நவம்பர் 17) காலை கடற்படைத் தளபதி அடமஸ்தானாதிபதி நுவரக் களவிய பிரதம சங்கநாயக்க வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற பின் கடற்படைக் கொடிகள் வண்ணமயமான ஊர்வலத்துடன் கொண்டு வரப்பட்டு புனித ஜெயஸ்ரீ மஹா போதி அருகில் வைக்கப்பட்டது. அதன் பின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் நீதியரச சங்கநாயகமும், அனுராதபுரம் லங்காராமய பிரதம அதிதியுமான வண.ரெலபனாவே தம்மஜோதி தேரர் கடற்படைக் கொடிகளை ஆசீர்வதித்து, ஜயஸ்ரீ மஹா போதிக்கு பிரித் ஓதி வழிபாடு செய்தார்.

அங்கு கடற்படைத் தளபதியின் அழைப்பின் பேரில், அடமஸ்தானாதிபதி புனித பல்லேகம ஹேமரத்தன தேரரின் ஆலோசனையின் கீழ், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பிரதம சங்கநாயக, கலாநிதி வணக்கத்துக்குரிய நுகேதண்ணே மங்கள தர்மகீர்த்தி ஸ்ரீ சோபித ரதனஜோதி பன்னானந்த நாயக்க தேரரால் கடற்படையின் எழுபத்து மூன்று வருட நீண்ட வரலாற்றில், தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த, காணாமல் போன மற்றும் அங்கவீனமடைந்த மாலுமிகள் அனைவருக்கும் அஞ்சலி மற்றும் ஆசீர்வாதங்களைச் செலுத்தப்பட்டதுடன் நாடு, தேசம் மற்றும் சம்மா சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்க இலங்கை கடற்படைக்கு பலம், சக்தி மற்றும் தைரியம் வாழ்த்தியதுடன், கடற்படைத் தளபதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட அனைத்து கடற்படை வீரர்களின் எதிர்கால வெற்றிக்காக ஆசீர்வாதம் செய்யப்பட்டது.

இந்த சமய நிகழ்ச்சிக்காக, கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, கடற்படை பௌத்த சங்கத்தின் தலைவர், கடற்படை பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க, பிரதி கடற்படை பிரதானி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்னாயக்க உட்பட கடற்படை பணிப்பாளர் நாயகங்கள்,வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட உடபட கட்டளை தளபதிகள்இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், கொடி அதிகாரிகள், கடற்படை தலைமையகம் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளை உட்பட அனைத்து கடற்படை கட்டளைகளுக்கும் இணைக்கப்பட்ட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகளும் கலந்து கொண்டனர்.