கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியொன்று திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது

கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சியொன்று 2023 டிசம்பர் 01 ஆம் திகதி திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

சமய மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை 2023 டிசம்பர் 09 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடுவதற்கு கடற்படை ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான சமூக நலத் திட்டம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில் திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மேலும், கிழக்கு கடற்படை கட்டளையை சேர்ந்த ஏராளமான கடற்படை வீரர்கள் இந்த உன்னத சமூக நிகழ்வை வெற்றிகரமாக்க முன்வந்தனர்.