08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து இலங்கையின் புதிய சாதனையைப் படைக்கவுள்ள கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே சிறிவர்தன மூன்றாவது நாள் நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனை படைக்கும் நடைபயணத்தை 2024 ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பித்த கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே.சிறிவர்தன மூன்றாம் நாளை 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாரவில பிரதேசத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

பாலவியாவில் இருந்து மாரவில வரையிலான மூன்றாவது நாளில் 75 கிலோமீற்றர் தூரத்தை பூர்த்தி செய்ததன் மூலம், அவர் தற்போது 218 கிலோமீற்றர் தூரத்தை கடந்துள்ளார். இதற்கிடையில், நான்காவது நாள் ஜனவரி 15 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.