தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வா பதவியேற்பு

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வா இன்று (2024 ஜனவரி 15) தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

கடற்படை மரபுப்படி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வாவை வரவேற்ற பின்னர், குறித்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.

மேலும், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின் ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன, கடற்படையின் மரபுப்படி தென்கிழக்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றுள்ளதுடன், ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன எதிர்காலத்தில் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக பதவியேற்க உள்ளார்.