ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 16) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, 1987 ஆம் ஆண்ட்டில் 16 ஆவது கெடட் அதிகாரி ஆட்சேர்ப்புக்கு உட்பட்ட கேடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்துகொண்டார், 36 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மேலும், மூத்த பணியாளர் அதிகாரி (செயல்பாடுகள்), துணை இயக்குநர் கடற்படை நிர்வாகம், செயல் இயக்குநர் கடற்படை நிர்வாகம், கேப்டன் கடல் பயிற்சி, கொமடோர் கடல் பயிற்சி, கடற்படை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர், கடற்படைப் பயிற்சி இயக்குநர், கடற்படைக் கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு), கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி, கடற்படை நலன்புரி பணிப்பாளர், செயல் இயக்குநர் பணிப்பாளர் நாயகம் சேவைகள், பணிப்பாளர் நாயகம் பயிற்சி, வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படை கட்டளை தளபதி மற்றும் கடற்படையின் பிரதித் தலைவர் ஆகிய முக்கிய பதவிகளை வகித்த புகழ்பெற்ற மூத்த அதிகாரியொறுவர் ஆவார்.