வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட பதவியேற்பு

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட இன்று (2024 ஜனவரி 22) வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

கடற்படை மரபுப்படி வடக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவை வரவேற்ற பின்னர், குறித்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் அருண தென்னகோன், கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.

மேலும், வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின் ரியர் அட்மிரல் அருண தென்னகோன், கடற்படையின் மரபுப்படி வடக்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றுள்ளார்.