ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலான சிறப்பு சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 24) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க 1988 ஆம் ஆண்டில் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 06 வது உள்வாங்கலின் கேடட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்தார் மற்றும் அவரது புகழ்பெற்ற கடற்படை பணியின் போது பரந்த அளவிலான நியமனங்களை பெற்றார். அவர் வகித்த சில முக்கிய நியமனங்களாக பிரதிப் பணிப்பாளர் (நலப்பணித் திட்டம்), துணை இயக்குனர் கடற்படை (விநியோகம்) மற்றும் பிரதிப் பணிப்பாளர் (உள்ளூர் கொள்முதல்), துணை இயக்குனர் (சிறப்பு திட்டங்கள்), கேப்டன் வழங்கல் மற்றும் சேவைகள் துறை (கிழக்கு), மூத்த பாடநெறி ஒருங்கிணைப்பாளர் (நீண்ட வழங்கல் மேலாண்மை படிப்பு), கடற்படை துணை இயக்குனர் (உணவு மற்றும் சீருடைகள்) மற்றும் துணை இயக்குனர் வெளிநாட்டு கொள்முதல் , இயக்குநர் கடற்படை உணவு மற்றும் சீருடைகள், கொமடோர் கண்காணிப்பாளர் விநியோகம் மற்றும் சேவைகள் (வடக்கு), கடற்படை இயக்குநர் (ஊதியம் மற்றும் ஓய்வூதியம்), இயக்குநர் ஜெனரல் (வரவு செலவு மற்றும் நிதி) மற்றும் இயக்குநர் ஜெனரல் விநியோகம் ஆகிய முன்னணி நியமனங்களை குறிப்பிடலாம்.