ரியர் அட்மிரல் அருண தென்னகோன் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் அருண தென்னகோன் தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 27) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

1988 ஆம் ஆண்டில் 18 ஆவது கேடட் ஆட்சேர்ப்பில் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் அருண தென்னகோன், தனது 35 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். மேலும், அவர் கடற்படைப் பயிற்சி பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் உள்ளூர்ப் பயிற்சி - உள்ளகம்), செயல் ப்ரொவொஸ்ட் மார்ஷல், பொறுப்பு கடற்படை அதிகாரி (பூனேவ) மற்றும் செயல் கமாண்டன்ட் இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா, கடற்படை உதவியாளர், கடற்படை தளபதியின் உதவியாளர் மற்றும் தனிப்பட்ட செயலாளர் கடற்படை ஆயுதப் பணிப்பாளர், சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் இசை மற்றும் கடற்படை பொறுப்பதிகாரி (வெலிசர), பிரதிப் கட்டளைத் தளபதி (தெற்கு) மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரி (காலி துறைமுகம்), பணிப்பாளர் வணிக வெடிபொருள் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவு (வெலிசர) மற்றும் விளையாட்டு இயக்குநர் , பணிப்பாளர் நாயகம் பணியாளர் மற்றும் தன்னார்வ கடற்படை தளபதி மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ஆகிய முக்கிய பதவிகளில் பணியாற்றினார்.