ரியர் அட்மிரல் சிசிர திஸாநாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சிசிர திஸாநாயக்க தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 மே 05) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் சிசிர திஸாநாயக்க அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

1990 ஆம் ஆண்டில் 03 ஆவது கடற்படை காலாட்படையைச் சேர்ந்த கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் சிசிர திஸாநாயக்க, தனது 33 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். மேலும், அவர் கட்டளை நில நடவடிக்கை அதிகாரி (வட மத்திய), பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி (கொழும்பு துறைமுகம்), கட்டளை நில நடவடிக்கை அதிகாரி (மேற்கு), துணை இயக்குனர் மரைன், கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை வடக்கு), கடற்படை கட்டளை அதிகாரி (தீவுகள்), பணிப்பாளர் கடற்படை காலாட்படை மற்றும் தளபதி கடற்படை காலாட்படை ஆகிய முக்கிய பதவிகளில் பணியாற்றினார்.