வடக்கு கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க இன்று (13 மே 2024) வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

கடற்படை மரபுப்படி வடக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்கவை வரவேற்ற பின்னர், அந்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.

மேலும், வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களைத் தெரிவித்த ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட, கடற்படையின் மரபுப்படி வடக்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெறப்பட்டதுடன், ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடயின் முன்னலையில் . எதிர்காலத்தில் கிழக்கு கடற்படை கட்டளை தளபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.