கிழக்கு கடற்படை கட்டளையின் தற்காலிக தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட பொறுப்பேற்றுள்ளார்

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்கள் இன்று (2024 மே 16) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

கடற்படை மரபுப்படி கிழக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவை வரவேற்ற பின்னர், அந்த கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.