உலக சாதனை படைத்த முன்னணி பொறியியலாளர் தொழில்நுட்பவியலாளர் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தனவின் சேவை பாராட்டுக்குரியது

இலங்கை கடற்படையின் பிரதம பொறியியலாளர் ஆர்.பி சமன் குமார சிறிவர்தன என்பவர் 586.1 கி.மீ தூரத்திற்குல் , புனேவையிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை வந்து மீண்டும் புனேவை நோக்கி சென்று, 2024 ஜனவரி 19 ஆம் திகதி நிறுவப்பட்ட புதிய உலக சாதனை தொடர்பான சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால், இன்று (2024 ஜூலை 09,) கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டதுடன், கடற்படையினரின் சேவையைப் பாராட்டி கடற்படைத் தளபதி அவருக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றை வழங்கினார்.

அதன்படி, முன்னணி பொறியியலாளர் டெக்னீஷியன் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தன மற்ற கடற்படை வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததுடன், தனது இலக்கை அடைய உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை தயார்படுத்திக் கொண்டதுடன், 586.1 கிலோமீற்றர் தூரத்தை 07 நாட்கள், 11 மணித்தியாலங்கள், 17 நிமிடங்கள் மற்றும் 14 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். புதிய உலக சாதனையை படைத்ததன் மூலம் கடற்படைக்கும் நாட்டுக்கும் பெரும் புகழைப் பெற்றுத்தந்தமைக்காக கடற்படைத் தளபதி அவருக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றை வழங்கினார்.

மேலும், பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் பிரியல் விதானகே, விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோ வருண பெர்டினான்டஸ் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.