இரண்டாவது இந்திய-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் பணிக்குழு மற்றும் இலங்கை கடற்படையின் இணைத்தலைவர் 2024 ஒக்டோபர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தினங்களில் (02) கொழும்பு கோட்யார்ட் ஹோட்டல் வளாகத்தில் இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 (2nd IORIS Steering Committee Policy Board and Working Groups Meeting -2024), 2024 ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவடைந்தது.

இந்தக் கூட்டத்தில், இந்து-பசிபிக் கடற்படைகள் உட்பட இந்து-பசிபிக் பிராந்தியத்தின் கடல்சார் சட்ட அமலாக்க முகமைகள், வழக்கறிஞர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர். பணிக்குழு கூட்டத்தில் மீன்வளத்தின் நிலைத்தன்மையை ஆதரிப்பதில் ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தும் தகவல் பரிமாற்றம், கடலில் நடைபெறுகின்ற அவசரநிலை மற்றும் சம்பவங்களை நிர்வகித்தல், கடல்சார் கண்காணிப்புக்கான நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கான பாதுகாப்பான கடல் பகுதியை பராமரிப்பது குறித்து பங்குதாரர்களிடையே முழுமையான அமர்வுகள் மற்றும் குழு விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டன.

அங்கு, குறிப்பாக இந்தத் தகவல் பகிர்வு அமைப்பின் எதிர்கால உரிமை மற்றும் மூலோபாய முன்னுரிமைகள், தகவல் பகிர்வுக்கான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் அத்துடன் வெளி பங்குதாரர்களின் பங்கேற்பு போன்ற முக்கியமான தலைப்புகளில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, சர்வதேச கடல்சார் சம்பவங்கள் குறித்த செயல்பாட்டுத் தகவலைப் பகிர்வதில் உள்ள சட்டரீதியான சவால்கள், இந்த அமைப்பின் எதிர்கால வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு, எதிர்கால கண்டுபிடிப்புகள், தகவல் பகிர்வு நிலையான நடைமுறை, தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி ஆதரவு போன்ற பரந்த அளவிலான பாடங்களில் கவனம் செலுத்தியன.

இந்த இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 கடைசி கூட்டத்திற்காக இலங்கை கடலோர காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க உட்பட இலங்கை கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு ஒன்றும் இணைந்து கொண்டது.