கடற்படை சேவைகள் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண பதவியேற்றார்

இலங்கை தொண்டர் கடற்படைத் தளபதியாக இருந்த, ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண, கடற்படையின் பணிப்பாளர் நாயகமாக இன்று (2024 ஒக்டோபர் 18) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சேவைகள் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்படி, பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் பிரியால் விதானகே, புதிய பணிப்பாளர் நாயகமாக பதவியேற்ற ரியர் அட்மிரல் லஷாந்த் என். ஹேவாவிதாரணவிடம் அப்பதவியின் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

மேலும், ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரன இலங்கை தொண்டர் கடற்படைத் தளபதியாகவும் கடற்படையின் பணிப்பாளர் நாயகமாகவும் தொடர்ந்து பணியாற்றுவார்.